Thursday, September 15, 2011

அதிகாலை ஆவல்

கதை கேளுங்கள் என்னிடம்


கதிரவன் கண்விழித்த நேரம்

காலாற நடந்து சென்றேன் சிறிது தூரம்


காற்றில் மீதமிருந்தது ஈரம்

மனத்தில் இல்லை பாரம்

மங்கலாய் ஓர் உருவம் சாலையின் ஓரம்


அங்கே நின்றது ஒரு பெண்

உடனே பாய்ந்தது என் கண்


பதில் பார்வை தந்தாள் பாவை

பாதிப்படைந்தவனுக்கு மருந்து ஆனது தேவை

காலமெல்லாம் செய்யச் சித்தமானேன் சேவை


நெஞ்சில் நிறைந்தது நேசம்

மனம் சென்றது அவள் வசம்


செல்ல நினைத்தேன் அவள் பக்கம்

திடீரென ஒரு சப்தம்


வந்தான் ஒருவன்

பார்த்தான் ஒரு கண்

யாரிவன்

இவள் நகைக்கிறாள்

அவன் அணைக்கிறான்

இணைந்து நடக்கிறார்கள்


நீண்டு சென்றது அவர்தம் கால் தடங்கள்

என்ன இது எனக்கு தடங்கல்


அட அற்பப் பயலே

அவர்கள் அதிகாலையில்

யாருமறியா வேளையில்

ஓடிச் சென்று

கூடி வாழப் போகிறார்கள்


நன்றாய் வாழட்டும் அந்த ஜோடி

நீ செல் உன் வழியை நாடி

ஆகாதே இரு நொடியில் பேடி


No comments: