Thursday, September 15, 2011

அதிகாலை ஆவல்

கதை கேளுங்கள் என்னிடம்


கதிரவன் கண்விழித்த நேரம்

காலாற நடந்து சென்றேன் சிறிது தூரம்


காற்றில் மீதமிருந்தது ஈரம்

மனத்தில் இல்லை பாரம்

மங்கலாய் ஓர் உருவம் சாலையின் ஓரம்


அங்கே நின்றது ஒரு பெண்

உடனே பாய்ந்தது என் கண்


பதில் பார்வை தந்தாள் பாவை

பாதிப்படைந்தவனுக்கு மருந்து ஆனது தேவை

காலமெல்லாம் செய்யச் சித்தமானேன் சேவை


நெஞ்சில் நிறைந்தது நேசம்

மனம் சென்றது அவள் வசம்


செல்ல நினைத்தேன் அவள் பக்கம்

திடீரென ஒரு சப்தம்


வந்தான் ஒருவன்

பார்த்தான் ஒரு கண்

யாரிவன்

இவள் நகைக்கிறாள்

அவன் அணைக்கிறான்

இணைந்து நடக்கிறார்கள்


நீண்டு சென்றது அவர்தம் கால் தடங்கள்

என்ன இது எனக்கு தடங்கல்


அட அற்பப் பயலே

அவர்கள் அதிகாலையில்

யாருமறியா வேளையில்

ஓடிச் சென்று

கூடி வாழப் போகிறார்கள்


நன்றாய் வாழட்டும் அந்த ஜோடி

நீ செல் உன் வழியை நாடி

ஆகாதே இரு நொடியில் பேடி


Wednesday, December 15, 2010

மொபைல் உலகம்

ஸ்பெக்ட்ரம் ஊழல்

கொதிக்கிறது அனல்

பாராளுமன்றம் மட்டுமல்ல

என் மனமாளும் மங்கையும்தான்

காரணம் ஒன்றுதான்

சோகம் அங்குதான்

செல்பேசி

மொபைல் ஃபோன்

அட்டா, இதற்குத்தான் எத்தனை ஃபேன்

செல்லுமிடமெல்லாம் பேச்சு

அதுவே பலரது மூச்சு

தொலைபேசி போய்

செல்பேசி வந்து

அதனாலே சென்றான்

பலபேர் காசி

இனியாவது தோழரே, யோசி

வேண்டாம் இனி செல்லிடப்பேசி

எதையும் முடிக்கலாம் நேரில் சென்று பேசி.

வைத்துக் கொள்ளலாம் அவசர செய்திக்கு

வேண்டாமே அன்பின் செய்திக்கு.

முகம் பார்த்துப் பேசுவோம்

அகம் குளிருவோம்.


Monday, November 22, 2010

சோதனை ஓட்டம்

அலுவல் முடிந்து வீட்டிற்கு ஓடலாம் என நினைத்த சமயத்தில், ஆஃபிஸ் 2007 மூலமாக பதிவிடும் ஒரு சோதனை முயற்சி

Sunday, September 19, 2010

மீண்டும் தமிழகம்

ஆண்டுகள் இரண்டு
ஓடிவிட்டன உருண்டு

மும்பையின் புயல்வேக வாழ்க்கை
அதிரடியான அலுவலக வாழ்க்கை

என்றும் காதலிக்கும்
கண் எரியும் கணினிகள்,
என்றைக்கும் காதலித்திரா
கண்குளிரும் கவர்ச்சிக் கன்னிகள்,

காப்பிக் கோப்பையை
கை கோர்த்தபடியே
கூகிளில் காப்பியடித்த கோடுகள்.

ஒரு வார விடுமுறைக்கு
மாதக் கணக்கில்
கால் கடுக்கக் காத்திருந்த பொழுதுகள்.

வயிறு வாடினால் வடா பாவ்
நட்பு கூடினால் அர்ரே வாவ்

முடிந்தது மும்பை வாழ்வு நடந்தது நிறைய நிகழ்வு
அடைந்தது மனம் நிறைய நெகிழ்வு.

கிடைத்தது சென்னை செல்ல வாய்ப்பு.
அதற்குத்தான் எத்தனை நாளாய் எதிர்பார்ப்பு.

இங்கு செய்தவைதான் அங்கும்.
இருந்தும் அதற்கே மனம் ஏங்கும்.

பணம் சேர்க்க வந்தவன்
கூடவே சில நல்ல மனங்களையும்
கூட்டிச் செல்கிறேன்

போய்வருகிறேன் பம்பாய்
என்றைக்கும் என் நெஞ்சில் நீ இருப்பாய்.

Saturday, March 27, 2010

கடலைக் காதல்

அடம் பிடித்து
அழுகை புரிந்தால்
அது மழலை.

மனதில்
இடம் பிடித்து
அன்பு புரிந்தால்
அது கடலை.

கடலைக்கு
உதவிடவே
இறைவன் படைத்தானோ
கடலை?

மழலைக்குப் புரியாது
கவலை.
கடலைக்கணக்கு
சற்றே பிசகினும்
உன்னைப் பிரியாது
கவலை.

என்னவளும்
சில நேரம் மழலைதான்.
அவளுடன்
கழியும் காலமெல்லாம்
எனக்கில்லை கவலைதான்.

கடலை வேறு
காதல் வேறு
கடலை கடைசி வரை வாராது.
காதல் போக, வரவேண்டும் சாதல்.

காதலியின் கை பிடித்து
கடலை கொள்வேரே
காதலையும் கைப்பிடிப்பீராக.

சோகத்தில் முடிந்தால்
கவலை வேண்டாம்.
தினமும் குடிக்கலாம் பீராக.


Wednesday, March 10, 2010

கயல்விழியாள்

நாள்தோறும்
நங்கை உன்
நளினம் பார்த்திருப்பேன்.

தினந்தோறும்
தேன்மொழியாள் உன்
தீண்டலுக்குத் துடித்திருப்பேன்.

தூண்டில் போட்டு
பிடிப்பார்கள் மீனை.
உன் விழியென்னும் மீனோ
என்னைத் தூண்டிலிட்டுப்
பிடிப்பதும் ஏனோ.

நா அசைந்தால்
மொழி உருப்பெரும்.
நின் விழி அசைந்தால்
நான் உருப்பெறுவேன்.

என்னிதயம்
ஏய்த்துப் பறித்தவளே
என் காலம் பொய்த்துப்
போயினும்
என்றும் உனை
நினைத்திருப்பேன்.
பேச்சு நின்றும்
மூச்சு நின்றும்
நினைவிழந்து போனாலும்
நின்னை இழக்க மாட்டேன்.

Sunday, March 7, 2010

காதல் பறவை


பறவைகளும் காதல் புரியுமாம்.
அவைகள் புரிவது
பறவை மொழி.

நான் பார்க்கும் பாவை
புரிவது என்னவோ
பார்வை மொழிதான்.

அவள் பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
எனக்கு
வேர்வை வழிதான்.
மனதெங்கும் வலிதான்.

இராட்சசி
இப்படிக் கொல்கிறாளே.
அவள் மனதில்
குடி கொள்கிறேன்
என்பதற்காக.

ஒரு பறவை
பிரிந்தால்
மறு பறவை
பரிதவிக்கும்.

என் பாவையவள்
பிரிந்தால்,
என்னிதயம்
ஏங்கும்.

"தூங்குனது போதும்
எந்திரிடா"

என எவரேனும்
எழுப்ப மாட்டாரா என.