Saturday, March 27, 2010

கடலைக் காதல்

அடம் பிடித்து
அழுகை புரிந்தால்
அது மழலை.

மனதில்
இடம் பிடித்து
அன்பு புரிந்தால்
அது கடலை.

கடலைக்கு
உதவிடவே
இறைவன் படைத்தானோ
கடலை?

மழலைக்குப் புரியாது
கவலை.
கடலைக்கணக்கு
சற்றே பிசகினும்
உன்னைப் பிரியாது
கவலை.

என்னவளும்
சில நேரம் மழலைதான்.
அவளுடன்
கழியும் காலமெல்லாம்
எனக்கில்லை கவலைதான்.

கடலை வேறு
காதல் வேறு
கடலை கடைசி வரை வாராது.
காதல் போக, வரவேண்டும் சாதல்.

காதலியின் கை பிடித்து
கடலை கொள்வேரே
காதலையும் கைப்பிடிப்பீராக.

சோகத்தில் முடிந்தால்
கவலை வேண்டாம்.
தினமும் குடிக்கலாம் பீராக.


Wednesday, March 10, 2010

கயல்விழியாள்

நாள்தோறும்
நங்கை உன்
நளினம் பார்த்திருப்பேன்.

தினந்தோறும்
தேன்மொழியாள் உன்
தீண்டலுக்குத் துடித்திருப்பேன்.

தூண்டில் போட்டு
பிடிப்பார்கள் மீனை.
உன் விழியென்னும் மீனோ
என்னைத் தூண்டிலிட்டுப்
பிடிப்பதும் ஏனோ.

நா அசைந்தால்
மொழி உருப்பெரும்.
நின் விழி அசைந்தால்
நான் உருப்பெறுவேன்.

என்னிதயம்
ஏய்த்துப் பறித்தவளே
என் காலம் பொய்த்துப்
போயினும்
என்றும் உனை
நினைத்திருப்பேன்.
பேச்சு நின்றும்
மூச்சு நின்றும்
நினைவிழந்து போனாலும்
நின்னை இழக்க மாட்டேன்.

Sunday, March 7, 2010

காதல் பறவை


பறவைகளும் காதல் புரியுமாம்.
அவைகள் புரிவது
பறவை மொழி.

நான் பார்க்கும் பாவை
புரிவது என்னவோ
பார்வை மொழிதான்.

அவள் பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
எனக்கு
வேர்வை வழிதான்.
மனதெங்கும் வலிதான்.

இராட்சசி
இப்படிக் கொல்கிறாளே.
அவள் மனதில்
குடி கொள்கிறேன்
என்பதற்காக.

ஒரு பறவை
பிரிந்தால்
மறு பறவை
பரிதவிக்கும்.

என் பாவையவள்
பிரிந்தால்,
என்னிதயம்
ஏங்கும்.

"தூங்குனது போதும்
எந்திரிடா"

என எவரேனும்
எழுப்ப மாட்டாரா என.


Monday, March 1, 2010

ஞாயிறு

ஞாயிற்றுக்கிழமை,

ஓய்வெடுப்பதற்கென்றே
ஒதுக்கப்பட்ட
ஓர் உன்னத நாள்.

முன்னைய இரவில்
கண்விழித்துக்
கதைபேசி
காலம் கழியும்.
பின்னைய பகலில்
வெகுநேரம்
படுக்கையில் புரண்டு
பொழுது புலரும்

பல்துலக்கி
அல்லது
அதனை விலக்கி
பலகாரம் சாப்பிட்டு
படை கிளம்பும்
பரிவாரம்.

என்னவோர் ஆரவாரம்
வாரா வாரம்.

நண்பர்களுடன்
நட்பு செய்தும்
வம்பர்களுடன்
வம்பு செய்தும்
வீட்டில் உறங்கியும்
தெருவில் இறங்கியும்
ஓடியும் பாடியும்
ஓய்ந்து முடியும் ஓய்வு நாள்

கடந்துவிட்டது தூரம்
மாறிவிட்டது நேரம்
அலுவல் சேர்ந்த நேரம்

சனியும் இல்லை
ஞாயிறும் இல்லை
தொடர்கிறது தொல்லை
இதற்கு இல்லையா ஓர் எல்லை?