Saturday, February 13, 2010

காதலர் தினம்

வந்துவிட்டது காதலர் தினம்
காதலருக்கெல்லாம் கொண்டாட்டம்
கலாச்சாரக் காவலருக்கோ திண்டாட்டம்.

காதலர்கள் முத்தமழை பொழிவார்கள்
காவலர்கள் யுத்தமழை பொழிவார்கள்

துணைவருக்குத் தூதனுப்ப‌
பேனா பிடிப்பர் காதலர்
சிவசேனா பிடித்த பெருமக்களோ

ஓடிச்சென்றுபிடிப்பர்
அன்பைப் பரிமாறும் காதல் புறாக்களை.

காதலைக் கண்டால் காத தூரம்
ஓடுவது ஏன்.
மனதில் ஈரம் இருக்கும் மனிதன்
காதலில் விழ ஆகாது வெகு நேரம்.

காதலைப் போற்றாவிடினும் போகட்டும்
தூற்றாதிருப்போம்.
அன்பிற்கு எதிரான வன்மத்தை
மனதில் ஏற்றாதிருப்போம்.

காதலர்களே,மகிழ்வுடன் வாழ்ந்திருங்கள்.
என் இனிய வாழ்த்துக்களோடு.

No comments: