Friday, February 19, 2010

நண்பன் பிரிவு

நண்பன் பிரிந்து செல்லலாம்.
நட்பு பிரிவதில்லை

உடன்பிறந்தவனில்லை.
நான்காண்டுகள்
உடனிருந்தவன்

இடர் நேரங்களில்
நட்பெனும்
சுடர் ஏற்றியவன்

எதுவும் செய்திடவில்லை பிரமாதமாய்
அதுவே தெரிகின்றது பிரமாண்டமாய்.

இணைபிரியா நண்பர்கள்
என்பார்கள்
ஆம்
இணைக்கு ஏது பிரிவு.

இணைபிரியாமல் இருந்தவன்
சென்னை செல்கிறான்.

வாய் பிரியாமல்
வாழ்த்துச் சொல்லியனுப்புகிறேன்.

குதூகலிக்கும்போது
குறுஞ்செய்தி அனுப்பு

தோன்றினால் தொலைபேசு

நேரம்கிடைத்தால் நேரில் வா

மணாளினி அமைந்தால் மடல் அனுப்பு.

முகவரியை மறக்காதே
என் மடலுக்கு பதில் வரி மறக்காதே.


No comments: