இரட்டைக் குழல் துப்பாக்கியிலிருந்து
புறப்பட்ட தோட்டாக்கள் போல
இரண்டு புன்னகை அம்புகள் என்னைத் தாக்கின.
பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது.
ஆம். என்னவள் செய்த மாயம் அது.
மீண்டுமொரு மாயம் செய்தாள்.
மருந்தெனும் விருந்து வைத்தாள்.
முத்துப் புன்னகைகளை முகத்தில் வீசியெறிந்தாள்.
காயம் ஆறவில்லை.
காலம் ஓடவில்லை.
காயத்தைக் காதலிக்க வைத்தாள்.
காதற்கடலில் தத்தளிக்க வைத்தாள்.
சீக்கிரம் என்னைக் காதலிக்கச் சொல்லுங்கள் அவளை.
கொடுமைக்காரி எனக் காவல்துறை அவளைக்
கைது செய்து அடைக்கும் முன்பாக.
என் இதயச் சிறை அவளுக்காகக் காத்திருக்கிறது.
Thursday, February 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment