Saturday, February 20, 2010

சர்வசக்தி

அன்பே,
நீ கண்சிமிட்டினால்,
மலைகளைத் தகர்ப்பேன்,
கடல்களைக் கடப்பேன்,
தங்கத்தில் உன் அங்கத்தை நனைப்பேன்,
சுடுமணலில் நெடுநேரம் கிடப்பேன்,
நடுநிசியிலும் உறங்காது உன்னை நினைப்பேன்,
ஏன்,
வில்லு படத்தைக்கூட பலதடவை பார்ப்பேன்

ஆனால்,
நம் குழந்தைக்கு இப்பொழுதே எல்கேஜி அட்மிஷன்
வாங்க வேண்டுமென்று கேட்பது என்ன நியாயம்.

நான் என்ன அவ்வளவு சக்தி படைத்தவனா?

No comments: