Thursday, February 11, 2010

சுதந்திரதின கொண்டாட்டம்

சாதிச் சண்டையில் நூறு பேர் பலி
இளம்பெண் கற்பழித்துக் கொலை
வீட்டில் புகுந்து துணிகரக் கொள்ளை
லஞ்ச ஊழலில் அதிகாரி கைது
குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தை
கடன் தொல்லையால் தற்கொலை
டீக்கடையில் அரிவாள் வெட்டு

அடச்சே

சுதந்திரதின சிறப்புத் திரைப்படங்கள்
விமர்சனம் படிக்கலாம் என‌
நாளிதழ் படிக்கையில் எவ்வளவு இம்சைகள்.

படம் பார்க்காமல் எப்படிக் கொண்டாடுவது.

நயன்தாராவின் நயமான பேட்டி
எதில் வருகிறது எனத் தெரியவில்லையே.
அந்தகோ. என்னவொரு கொடுமை.

சுதந்திரம் கிடைத்துதான் என்ன பயன்.

No comments: