மூன்றாண்டு காலம்
மறக்காது எந்நாளும்
வகுப்பில் இருந்த நாட்கள் குறைவு
இருப்பினும்
மனம் மகிழாமல் இருந்த நாட்கள் குறைவு
வாசித்த புத்தகங்கள் குறைவு
இருப்பினும்
நேசித்த நெஞ்சங்களில் இல்லை குறைவு
பெற்ற மதிப்பெண்கள் குறைவு
இருப்பினும்
கற்ற நற்பண்பினில் இல்லை குறைவு
அன்று கல்லூரி செல்லாமல் இருந்தமைக்காக
ஒருநாளும் வருந்தியதில்லை.
இன்று செல்ல முடியாமல் போனதற்காக
நான்கொண்ட வருத்தம்
ஒருநாளும் குறையப் போவதுமில்லை.
எல்லாம் இருப்பினும்
மனதில் மாபெரும் நிறைவு.
இந்த நாளில் என் நண்பர்களில்
எவரேனும் ஒருவராவது
என்னை நினைத்திருப்பார்கள் அங்கு.
அதுபோதும் எனக்கு
என் நினைவுகள்
கல்லூரியை முத்தமிட்டிருக்கும்.
காலமெல்லாம் அது நிலைத்திருக்கும்.
Friday, February 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment